என்னுடன் சிரிக்கலாம் வாங்க
ஒரு பேஷண்ட் டாக்டரிடம்: டாக்டர் எங்க வீட்டுக்கு பக்கத்தில ரொம்ப தெரு நாய்கள் எப்பவும் குரைச்சுக்கிட்டு இருக்கிறது. அதனால எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது.
டாக்டர்: கவலைப் படாதீங்க எங்கிட்ட ரொம்ப ஸ்டராங்கான மாத்திரைகள் இருக்கு. இதை எடுத்தக்கங்க. எல்லாம் சரியாயிடும்.
சில நாட்கள் கழித்து அதே பேஷண்ட் டாக்டரிடம் வந்தார். " டாக்டர் நீங்க கொடுத்த மாத்திரைகள் வேலை செய்யலை".
டாக்டருக்கு ஆச்சரியமாக இருந்தது. " அப்படியா" என்று வியந்தார்.
பேஷண்ட் சொன்னார் " நான் துரத்தி பிடிச்சு அந்த மாத்திரைகளை நாய்களுக்கு கொடுத்தேன் அப்படியும் பயனில்லை" என்றார்.
___________________________________________________________________________
ஒரு பேஷண்ட் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தான். அவன் மூக்கில் ஒரு வெள்ளரிக்காயும் ஒரு காதில் காரட்டும் மற்றொரு காதில் தக்காளியும் தொங்கிக் கொண்டிருந்தன. டாக்டரிடம் கேட்டான் " டாக்டர் எங்கிட்ட என்ன கோளாறு?". டாக்டர் சொன்னார் " நீங்க சரியா சாப்பிடறதில்லை"
___________________________________________________________________________
டாக்டர் பேஷண்டிடம்: உங்களுக்கு ஒரு கெட்ட செய்தியும் அதை விட மோசமான செய்தியும் சொல்லப்போறேன்.
பேஷண்ட்: கெட்ட செய்தி என்னன்னு சொல்லுங்க
டாக்டர்: உங்க டெஸ்ட் ரிபோர்ட் வந்திருக்கு. அதன்படி நீங்க 24 மணி நேரம் தான் உயிரோடு இருப்பீங்க.
பேஷண்ட்: அதை விட மோசமான செய்தி?
டாக்டர்: உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும்.
___________________________________________________________________________
மனோதத்துவ டாக்டரிடம் ஒரு பேஷண்ட்: டாக்டர் ராத்திரி தூங்க போறச்ச என்னோட கட்டிலுக்கு அடியில யாரோ இருக்கிற மாதிரி இருக்கு. அதனால எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது.
டாக்டர்: கவலைப் படாதீங்க ஒரு வாரத்துக்கு டெய்லி என்னை வந்து பாருங்க நான் இதை சரி பண்ணிடநேன். பீஸ் 1000 ரூபாய் ஆகும்.
சில தினங்கள் கழித்து மார்கெட்டில் டாக்டர் அந்த நோயாளியை சந்திக்கிறார்.
டாக்டர்: என்ன நீங்க வந்து என்னை பார்க்கலையே?
பேஷண்ட்: டாக்டர் என்னோட பிரச்னை சரியாயிடுச்சு. கார்பெண்டர் ஒருத்தர் என்னொட கட்டில் கால்களை அறுத்து சரி பண்ணிட்டார்.
___________________________________________________________________________
ஒரு பேஷண்ட் டாக்டரிடம்: டாக்டர் என் மனைவிக்கு காது சரியா கேக்கறதில்லை. நீங்க தான் வைத்தியம் பார்க்கணும்
டாக்டர்: எவ்வளவு தூரத்திலிருந்து பேசினா கேக்க மாட்டேங்கறதுன்னு சொல்லுங்க. அதுக்கு தகுந்த மாதிரி வைத்தியம் பார்க்கலாம.
வீடு திரும்பிய அவன் மனைவிக்கு பின்னால் 50 அடி தள்ளி நின்று " டார்லிங் ராத்திரி டின்னருக்கு என்ன சமைக்கற" என்று கேட்டான். மனைவியிடமிரந்து பதில் வராமல் போகவே 40 அடி தள்ளி அதே கேள்வியை கேட்டான். அப்படியும் பதில் வராததால் 30 அடி 20 அடி என்று நகர்ந்து கேட்டபின் மனைவியின் மிக அருகில் நெருங்கி அதே கேள்வியை கேட்டான். மனைவி திரும்பி " இதோட ஐந்தாவது தடவையா சொல்லிட்டேன் ராத்திரிக்கு சிக்கன் சமைச்சுக்கிட்டு இருக்கேன்" என்றாள்.
_____________________________________________________________________________________
மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனைக்கான வகுப்பு; டாக்டர் மாணவர்களிடம் சொன்னார் "பிரேத பரிசோதனையில் முக்கியமாக இரண்டு விஷயங்களை கவனிக்கணும். முதலாவதாக அருவருப்பு கூடாது. இப்போ பாருங்க " என்று சொல்லி தன் விரலைக் கொண்ட பிரேதத்தின் உடலைத் தொட்டு விரலை வாயில் வைத்தார். " எஙல்லோரும் பண்ணுங்க" எனறார். மாணவர்கள் முகத்தை சுளித்தாலும் அப்படியே பண்ணினாங்க. " இரண்டாவதாக கவனம் வேண்டும். ஒரு முக்கியமான விஷயத்தை நீங்க பார்க்க தவறிட்டீங்க. நான் பிரேதத்தை தொட்டது ஆட்காட்டி விரலில் அனால் வாயில் வைத்தது நடு விரலை" என்றார்.
அனைத்தும் ரசித்து சிரிக்க கூடியவைகள் ...
ReplyDeletenanraka irunthathu
ReplyDelete