சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ்
1.நான் பாடும் மவுன ராகம் கேட்க வில்லையா?-- பாடல் வரி
கடிப்பவர்: மவுன ராகம் எப்படிடா கேக்கும் புண்ணாக்கு
2.ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு-- பாடல் வரி
கடிப்பவர்: அடேங்கப்பா அவ்வளவு பெரிய கோப்பையா
3.உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா?-- பாடல் வரி
கடிப்பவர்: உன் கருப்பான கண்ணம் சிவப்பாகலாமா செருப்படி படலாமா சம்மதம் தானா?
4.வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன்-- பாடல் வரி
கடிப்பவர்: முதல்ல ரோட்டை பார்த்து போடா டேய்..போய் சேந்துர போற!!!
5.என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா?-- பாடல் வரி
கடிப்பவர்: அங்க உயிர் போய்டுச்சுன்னு கத்துறாங்க ...உனக்க இங்க பாட்டு கேட்க்குதா..ஓடி போயிடு...
6.நலம் நலமறிய ஆவல்!--பாடல் வரி
கடிப்பவர்: இப்படிக்கு முனுசாமி
7.அதாண்டா இதாண்டா அருனாச்சலம் நாதாண்டா--பாடல் வரி
கடிப்பவர்: சார்,கொஞ்சம் மரியாதையா பேசுங்க!!!
8.மழை வருது மழை வருது குடை கொண்டு வா---பாடல் வரி
கடிப்பவர்: யோவ் யாருய்யா ..அது வானிலை அறிவிப்பாளர ஹீரோவா போட்டது??
9.காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்---பாடல் வரி
கடிப்பவர்: அறிவே கிடையாதா? தலை கீழா உட்கார்ந்தா எழுதுவே?
10.இரவா பகலா நிலவா---பாடல் வரி
கடிப்பவர்: கண்ணாடிய போடுங்க முதல்ல!!
11.ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ---பாடல் வரி
கடிப்பவர்: நம்ம வானிலை அறிக்கையை நம்புனாலே இப்படித்தான்!!!
12.அவள் பறந்து போனாலே---பாடல் வரி
கடிப்பவர்: அதுக்கென்ன பண்றது வந்தவன் அமெரிக்கா மாப்பிள்ளை ஆச்சே!!
Comments
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..