தம்பதிகளுக்கிடையே நிகழும் 'சுவாரஸ்யமான" (நமக்குத்தான்!) காட்சிகள்!







சில குடும்பங்களில் தம்பதிகளுக்கிடையே நிகழும்
'சுவாரஸ்யமான" (நமக்குத்தான்!) காட்சிகள்!

============================================
"இன்னிக்கு வியாழக்கிழமை'ங்கறது ஞாபகமிருக்கா? குரு பகவானுக்கு
வெளக்குப்போட கோயிலுக்கு கெளம்பலேயா?"

"நாளக்கி போட்டுக்கலாமேடி..."
"எதுக்கு? ..துர்க்கைக்கு வெளக்குப் போட பொம்பளக்கூட்டம் நெறைய
வருமுன்னா?"
---------------------------------------------------------
"மழை வர்றமாதிரி இருக்கு! மொட்டை மாடில காயற துணியையெல்லாம் எடுத்துட்டு
வாங்க..ஓடுங்க!"
"வந்ததும் போறேனேடி......"

"யாரு வந்ததும்?.....துணி எடுக்க பக்கத்து வூட்டுக்குட்டி அவ மாடிக்கு
வந்ததுமா?"

------------------------------------------------------------

"எங்க அம்மாவ ஸ்டேஷன்லேருந்து அழைச்சிக்கிட்டு வரச்சொன்னா ஏன்
தயங்கறீங்க...?"

"உங்க அம்மா மட்டும்தான் வர்றாங்களா..?"

"ஏன்? மச்சினியும் கூட வந்தாத்தான் அழைக்கப்போவீங்களா?"
----------------------------------------------------------
"டாக்டர் வீட்டுக்குப்போனா அங்க வந்திருக்கற பொம்பளங்கக்கிட்ட வீணா என்ன
பேச்சு?"

"நலம் விசாரிக்கறதுல தப்பு இல்லையேடி....."
"என்கிட்ட என்னிக்கு விசாரிச்சிருக்கீங்க?"
---------------------------------------------------------
"நான் ஊருக்குப் போயிருந்தப்ப யார இங்க அழைச்சிக்கிட்டு
வந்தீங்க?....வாஷ்பேஸின் கண்ணாடில ஸ்டிக்கர் பொட்டு ஒட்டியிருக்கு?"

"அது நீ ஒட்டுனதாத்தான் இருக்கும்டி....."

"இவ்வளாவு சின்னதாவா நான் வக்கிறேன்?....என்னிக்கு என் மூஞ்ச நிமுந்து
பாத்திருக்கீங்க...ஹும்!"

Comments

  1. ஜாலியான நகைச்சுவை :))

    வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..

Popular posts from this blog

நகைச்சுவை கதைகள்…

செம மொக்கை ஜோக்குகள்

தத்துவம் மச்சி தத்துவம்