**** தமிழ் சினிமா டயலாக் ஜோக்ஸ்*****

ROFL Pictures, Images and Photos


நம்ம தமிழ்படத்துல வந்த இந்த டயலாக்குக்கு எல்லாம் இப்படி பதில் சொல்லியிருந்தா எப்படி இருக்கும்...

..................................................

சிட்டிசன்:

கோர்ட் சீன்
அஜித்: அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு???

நீதிபதி: எருமைநாயகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு???

அ: தெரியாதே...

நீ: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு...

..................................................


காக்க காக்க:

ஜீவன்: அவளை தூக்கறன்டா... உனக்கு வலிக்கும்டா... நீ அழுவடா...

சூர்யா: அவளை தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்... ஏனா அவ 120 கிலோ

..................................................


சந்திரமுகி:

பிரபு: என்ன கொடுமை சரவணன்...

தலைவர்: எது??? ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா?

..................................................


ரமணா:

வி.கா: டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு

மாணவர்: அது damil இல்ல கேப்டன் தமிழ்

வி.கா: அப்ப எனக்கு damilல பிடிக்காத ஒரே வார்த்தை "தமிழ்"

..................................................


கௌரவம்:

சிவாஜி: கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சி... அதனால பறந்து போயிடுச்சு...

பத்மினி: ரெக்கை முளைச்சா பறந்து போகமா... பின்ன என்ன நீந்தியா போக முடியும்???

..................................................


திருமலை

விஜய்: யார்டா இங்க அரசு???

(முதல் நபரை பார்த்து): நீ அரசா?

(இரண்டாவது நபரை பார்த்து) நீ தான் அரசா???

(மூன்றாவது நபரை பார்த்து) ஓ நீ தான் அரசா???

அந்த நபர்: நான் அந்துமணிப்பா... அரசு குமுதம் ஆபிஸ்ல இருப்பாரு...

..................................................


நாயகன்:

கமல்: அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறன்...

டிராபிக் போலிஸ்: டேய் வெளக்கெண்ண... அவன் போகும் போது "கிரீன்" சிக்னல்... இப்ப "ரெட்"டுடா...

..................................................


ரஜினி: நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது! ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்....

கவுண்டர்: ஏம்பா!!! சாப்பாட்டு பந்திக்கு வந்து பேசற பேச்சா இது??? மாப்பிள்ளை வீட்டு காரவங்க என்ன நினைப்பாங்க...

..................................................

சுள்ளான்:

தனுஷ்: சுள்ளான் சூடானேன்... சுளுக்கெடுத்துடுவன்

அடியாள் : ஓ அப்டியா!!! எனக்கு கூட ரெண்டு நாளா கால்ல சுளுக்குப்பா... கொஞ்சம் எடுத்துவிடேன்...

..................................................

மாயாவி:

சூர்யா: யாரா எனக்கு போட்டி??? எனக்கும் யாரும் போட்டியில்ல... நானும் யாருக்கும் போட்டி இல்ல... என்ன சரியா???

சத்யன்: நல்லா தான்டா இருந்த!!! உனக்கு எதுக்குட பன்ச் டயலாக்? அஜித் படம் பாக்காதனு சொன்னா கேக்கறியா???

Comments

  1. //
    வி.கா: டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு

    மாணவர்: அது damil இல்ல கேப்டன் தமிழ்

    வி.கா: அப்ப எனக்கு damilல பிடிக்காத ஒரே வார்த்தை "தமிழ்"//

    ரொம்ப சூப்பரு தல

    ReplyDelete
  2. நன்றி நன்றி நன்றி இளைய கவிக்கும்,கனககோபிக்கும்

    ReplyDelete
  3. unmaiyave super supersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersupersuper

    ReplyDelete

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..

Popular posts from this blog

நகைச்சுவை கதைகள்…

செம மொக்கை ஜோக்குகள்

தத்துவம் மச்சி தத்துவம்