எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்



"மச்சான்..டேய்..நீ சிரிச்சா ரஜினி!...பேசினா வைரமுத்து!!...ஆடுனா பிரபுதேவா!!!...பாடுனா ஜேசுதாஸ்!!!!..படுத்தா உசிலைமணி வெயிட்டைக் குறைடா மாப்ளே "

******

"மச்சான்!நீ அகநானூறைக் கரைச்சுக் குடிச்சவன்தான்..ஒப்புக்கறேன்..நீ புறநானூறைப் படிச்சு கிழிச்சவன்தான்...ஒப்புக்கறேன்!ஆனா என்னோட பணம் முழுசா நானூறை முழுங்கி ஏப்பம் விடுட்டியேடா...நீ நல்லா இருப்பியா?"

******

"நான் துண்டை கையில் எடுத்தா குளிக்கப் போறேன்னு அர்த்தம்...துண்டைக் கழுத்தில் போட்டால் ஊருக்குப் போறேன்னு அர்த்தம்...துண்டை இடுப்பில் கட்டினால் கோயிலுக்குப் போகிறேன்னு அர்த்தம்...துண்டை தலையில் போட்டால் கடன் கேக்கிறேன்னு அர்த்தம்!"

******

"நேத்து உன்னையும் உன் தம்பியையும் பார்த்தேன்.நிச்சயமா எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது!...பின்னே?ரெண்டு கழுதைகளைச் சேர்ந்து பார்த்தால் அதிர்ஷ்டம் அடிக்குமாமே?!"

******

"நேத்து உன்னைப் பாக்க உன் ரூமுக்கு வந்தேன்.நல்ல வெயில்நேரம்...ஃபேன்கூட இல்லாத ரூமில் குப்புறப்படுத்து தூங்கிட்டிருந்தே..சரி சரி...புரியுது!எருமையால மல்லாக்கப் படுக்கமுடியாதே!!"

******

"அன்புக் காதலா...என்னைவிட்டு நீ ரொம்ப தூரம் போயிட்டாலும்,..என்னைச் சந்திக்கவே வரலைன்னாலும்,..போன்கூட பன்னலைன்னாலும்,..எத்தனை வருசமானாலும் சரி...மறக்கமுடியுமா உன்னை???நான் முதன்முதலில் பார்த்த குரங்கு நீதானே?!"

******

"அன்பே...நான் சூரியன்...நீ நிலா! நிலா சூரியன்கிட்டேயிருந்து வெளிச்சத்தை வாங்கும்.நீ என்கிட்டயிருந்து பணம் வாங்குவே!...ஆனா ரெண்டு பேருமே திருப்பித் தரமாட்டீங்க!"


Comments

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..

Popular posts from this blog

நகைச்சுவை கதைகள்…

செம மொக்கை ஜோக்குகள்

தத்துவம் மச்சி தத்துவம்