தமிழ் நகைச்சுவை

அ‌திக குசு‌ம்பு ‌பிடி‌த்த ஒரு‌த்த‌‌ர், செ‌ன்‌ட்ர‌ல் ர‌யி‌ல்‌நிலைய‌த்‌தி‌ல் அருகிலிருந்தவரை கேட்டார்.

ஹெளராஹ் எக்‌ஸ்‌பிர‌ஸ் எத்தனை மணிக்கு புறப்படும்?
10.30 மணி.
பெங்களூர் மெயில்?
11.25.
தமிழ்நாடு எக்‌ஸ்‌பிர‌ஸ்?
1.15.
சதாப்தி எக்‌ஸ்‌பிர‌ஸ்?
பக்கத்திலிருந்தவர் எரிச்சலோடு - 3.00 மணிக்கு.

பிருந்தாவன் எக்‌ஸ்‌பிர‌ஸ்?
பொறுமையிழந்த அவ‌ர், நீங்கள் எந்த ஊரு‌க்கு‌ப் போக வேண்டும்?

நா‌ன் எ‌ந்த ஊரு‌க்கு‌ப் போக‌வி‌ல்லை, தண்டவாளத்தைத் தாண்டணும் அதா‌ன் கே‌ட்டே‌ன்.

****************************

அந்த ஜோசியர் ஏன் அடிக்கடி வந்து சட்டைக் காலரை மட்டும் த‌ச்‌சி‌க்‌கி‌ட்டு போறாரு?

நான் சொல்றது நடக்கலன்னா என் சட்டைக் காலரைப் புடிச்சு ஏன்னு கேளுங்கன்னு வர்றவங்க கிட்டல்லாம் சத்தியம் பண்ணி‌க்‌கி‌ட்டு இரு‌க்காரு... அதான்!


****************************

என் பையன் இவ்வளவு அதிக மார்க் வாங்கி பாஸ் பண்ணுவான்னு நினச்சு கூட பாக்கல்ல!

வெரி குட் அடுத்து என்ன செய்யப்போற?

இதுல நான் என்ன செய்ய வே‌ண்யடிது இரு‌க்கு, அவனே 2ம் கிளாஸ்ல போ‌ய் உ‌ட்கா‌ந்து‌க்க வே‌ண்டியதுதா‌ன்.

Comments

  1. அய்யா சாமி, எழுத்து கலர மாத்துங்க.. படிக்கறதுக்குள்ள கண்ணு வலிக்குது...

    ReplyDelete

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..

Popular posts from this blog

நகைச்சுவை கதைகள்…

செம மொக்கை ஜோக்குகள்

தத்துவம் மச்சி தத்துவம்