தத்துவம் மச்சி தத்துவம்







என்ன பாக்குற? பேரப்

பார்த்தாலே ச்சும்மா

அதிருதுல்ல!!!

அப்படி அதிரலைன்னா,

'செல்'ல

வைப்ரேட்டிங்

மோடுக்கு மாத்து.

திரும்பவும்

அனுப்பறேன். அதிரும்



*****


நேத்து உன்னையும்

உன் தம்பியையும்

பார்த்தேன்.நிச்சயமா

எனக்கு ஏதோ அதிர்ஷ்டம்

அடிக்கப்

போகுது!...பின்னே?ரெண்டு

கழுதைகளைச் சேர்ந்து

பார்த்தால்

அதிர்ஷ்டம்

அடிக்குமாமே?!"

******

துடிப்பது என்

இதயம்தான். ஆனால் அதன்

உள்ளே இருப்பது நீ.

வலித்தால் சொல்லிவிடு.

நிறுத்தி விடுகிறேன்.

துடிப்பதை அல்ல. இப்படி

ஓவரா ரீல் விடுவதை.



*****



ஏன்.... தண்ணி தெளிச்சி

கோலம் போடுறாங்க

தெரியுமா...!

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

கோலம் போட்டு தண்ணி

தெளிச்சா கோலம்

அழிஞ்சிடும்ல..!



*****



பம்பர் பரிசு:

எனக்கு நீங்கள்

தொடர்ந்து

குறுஞ்செய்தி

அனுப்பினால், வெற்றி

பெறலாம்...

1. ரூபாய் 10 லட்சம்

மதிப்புள்ள காருடைய

புகைப்படம்.


2. 29'' இஞ்ச் கலர்

டிவியோட அட்டைப்

பெட்டி.


3. சிங்கப்பூர் போகிற

விமானத்திற்கு டாட்டா

காட்டும் வாய்ப்பு


4. மெகா பரிசு:

நட்சத்திர ஹோட்டலில்

என்னுடன் மதிய உணவு

அதுவும் உங்கள்

செலவில்.

சீக்கிரம்

முந்துங்கள்!!!!



*****



முடியாது முடியாது..

சில விஷயத்தை மாத்த

முடியாது

காலிஃப்ளவர் தலைக்கு

வைக்க முடியாது. கவரிங்

கோல்டு அடகு வைக்க

முடியாது. கோல

மாவில் தோசை சுட

முடியாது. வீணாப் போன

குறுஞ்செய்தி

வந்தாலும் உன்னால

படிக்காம

இருக்க முடியாது.



*****



ஊசி போட நர்ஸ் வேணும்,

காசு போட பர்ஸ் வேனும்,

காபி போட சுகர் வேணும்,

கடலை போட ஃபிகர்

வேணும்,

எஸ்.எம்.எஸ் அனுப்ப

மனசு வேனும்,

அத படிக்க லூசு வேணும்,

உன்னை மாதிரி

கொக்கரக்கோ

கும்மாங்கோ!



*****



லாரியில விழுந்தா உடனே

சாவு !

காதல்லே விழுந்தா

தெனந்தெனம் சாவு..!



*****



ஆறு முழுவதும்

போகுதாம் தண்ணி

பாத்ரூமுல

குளிக்குதாம் பன்னி.



*****



நீ இறந்த பிறகும்

பெண்களை சைட்

அடிக்கனுமா?

கண்களை தானம் செய்....


(பாருங்கப்பா ஒரு நல்ல

செய்தியை

எப்டியெல்லாம் சொல்ல

வேண்டியிருக்கு)



*****



உங்க செல்லுக்கு என்

அட்ரஸ்

அனுப்பியிருக்கிறேன் ..

என்னோட அட்ரஸுக்கு

உங்க

செல்ல அனுப்பமுடியுமா?



*****



வாழ்க்கையில் அன்பான

உறவுகள் கிடைப்பது

முக்கியமல்ல. வாழ்நாள்

முழுவதும்

அவர்களுடன் அன்பாக

இருப்பதே முக்கியம்.



*****



"மச்சான்..டேய்..நீ

சிரிச்சா

ரஜினி!...பேசினா

வைரமுத்து!!...ஆடுனா

பிரபுதேவா!!!...பாடுனா

ஜேசுதாஸ்!!!!..படுத்தா

உசிலைமணி வெயிட்டைக்

குறைடா

மாப்ளே "



******



"மச்சான்! நீ

அகநானூறைக் கரைச்சுக்

குடிச்சவன்தான்..ஒப்புக்கறேன்..நீ

புறநானூறைப் படிச்சு

கிழிச்சவன்தான்...ஒப்புக்கறேன்!ஆனா

என்னோட பணம் முழுசா

நானூறை முழுங்கி

ஏப்பம்

விடுட்டியேடா...நீ

நல்லா இருப்பியா?"



******



"நான் துண்டை கையில்

எடுத்தா குளிக்கப்

போறேன்னு

அர்த்தம்....துண்டைக்

கழுத்தில்

போட்டால் ஊருக்குப்

போறேன்னு

அர்த்தம்....துண்டை

இடுப்பில் கட்டினால்

கோயிலுக்குப்

போகிறேன்னு

அர்த்தம்....துண்டை

தலையில் போட்டால் கடன்

கேக்கிறேன்னு

அர்த்தம்!"



******



"நேத்து உன்னைப்

பாக்க உன் ரூமுக்கு

வந்தேன்.நல்ல

வெயில்நேரம்...ஃபேன்கூட

இல்லாத ரூமில்

குப்புறப்படுத்து

தூங்கிட்டிருந்தே..சரி

சரி...புரியுது!எருமையால

மல்லாக்கப்

படுக்கமுடியாதே!!"



******



"அன்புக்

காதலா...என்னைவிட்டு நீ

ரொம்ப தூரம்

போயிட்டாலும்,..என்னைச்

சந்திக்கவே

வரலைன்னாலும்,..போன்கூட

பன்னலைன்னாலும்,..எத்தனை

வருசமானாலும்

சரி...மறக்கமுடியுமா

உன்னை???நான்

முதன்முதலில் பார்த்த

குரங்கு நீதானே?!"



******



"அன்பே...நான்

சூரியன்...நீ நிலா! நிலா

சூரியன்கிட்டேயிருந்து

வெளிச்சத்தை

வாங்கும்.நீ

என்கிட்டயிருந்து

பணம் வாங்குவே!...ஆனா

ரெண்டு பேருமே

திருப்பித்

தரமாட்டீங்க!"



*****



நண்பா, என்னிடம் ஒரு

நல்ல செய்தியும் ஒரு

கெட்ட செய்தியும்

இருக்கிறது.

நல்ல செய்தி

என்னவெனில்

என்னிடம் எந்த கெட்ட

செய்தியும் இல்லை.

கெட்ட செய்தி

என்னவெனில்

என்னிடம் எந்த நல்ல

செய்தியும் இல்லை.

இது உனக்கு நல்ல

செய்தியா? கெட்ட

செய்தியா?????????




*****



பணம் போகும், வரும்.

நண்பர்கள் வருவார்கள்,

போவார்கள்.

மழை வரும், போகும்.

காதல் வரும், போகும்.

ஆனால்,

இந்த வயசில உன் பல்லு

போச்சின்னா, திரும்ப

வருமா?

அதனால, ஒழுங்கா எனக்கு

எஸ்.எம்.எஸ் அனுப்பு!!



*****




ஒரு மரத்தில் 6 பறவைகள்

உட்கார்ந்திருந்தன.

மனிதன் ஒருவன் அதைப்

பார்த்தான்.

துப்பாக்கியால்

மரத்தைப் பார்த்துச்

சுட்டான்.

உடனே 5 பறவைகள்

பறந்துவிட்டன.

ஆனால், ஒரு பறவை

மட்டும் அங்கேயே

உட்கார்ந்திருந்தது.

ஏன்?

ஏன்?

ஏன்?

கொழுப்பு....

உன்னை மாதிரியே!




******



நண்பா, இன்று ரீசார்ஜ்

நாள்.

கீழ்க்காணும் நட்பில்

நீ இருந்தால் என்

செல்பேசியை ரீசார்ஜ்

செய்.

ரூ.110 þ சாதா நண்பர்

ரூ.200 þ நல்ல நண்பர்

ரூ.220 þ இனிய நண்பர்

ரூ.300 þ அழகான நண்பர்

ரூ.330 þ அன்புக்குரிய

நண்பர்

ரூ.500 þ சிறந்த நண்பர்

ரூ.550 þ நெருங்கிய

நண்பர்

ரூ.1100 þ உண்மையான நண்பர்

கண்டிப்பாக ரீசார்ஜ்

செய்யவேண்டும்.

உங்கள் ரீசார்ஜøக்காக

நான்

காத்திருக்கிறேன்.....

அப்புறம்,

இதே குறுஞ்செய்தியை

எனக்குத் திருப்பி

அனுப்பிவிடாதே!




*****




எவ்வ்ளோ கஷ்டம்

வந்தாலும் லைஃப்ல ஒரு

விஷயத்தை மட்டும்

எப்பவுமே

மறக்கக்கூடாது.

சாரி அது என்னன்னு

மறந்துபோச்சு.

நாளைக்கு சொல்றேன்.




*****

Comments

  1. வாழ்க்கையில் அன்பான

    உறவுகள் கிடைப்பது

    முக்கியமல்ல. வாழ்நாள்

    முழுவதும்

    அவர்களுடன் அன்பாக

    இருப்பதே முக்கியம்.

    அருமையான தத்துவ முத்து.

    ReplyDelete
  2. மிக அருமை ஜி

    ReplyDelete

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..

Popular posts from this blog

நகைச்சுவை கதைகள்…

செம மொக்கை ஜோக்குகள்